கடலே கடலே உன்னைக் கடைந்து கலக்குறுத்து
உடலுள் புகுந்துநின் றூறல் அறுத்தவற்கு என்னையும்
உடலுள் புகுந்து நின் றூறல் அறுக்கின்ற மாயற்குஎன்
நடலைக ளெல்லாம் நாகணைக் கேசென்று ரைத்தியே
கடலே கடலே உன்னைக் கடந்து கலக்குறுத்து- கடலே! கடலே! உன்னைக் கடைந்து கலக்கி உறுத்தி உன்
உடலுள் புகுந்து நின்றூறல் அறுத்தவற்கு- உடலில் புகுந்து நின்று உன் செல்வமான அமுதத்தை அறுத்தவருக்கு
என்னையும் உடலுள் புகுந்து நின்றூறல் அறுக்கின்ற மாயற்கு- என்னையும் என் உடலில் புகுந்து நின்று என் உயிரை அறுக்கின்ற மாயனுக்கு
என் நடலைகளெல்லாம் நாகணைக்கே சென்று உரைத்தியே- என் கற்பனை வாழ்வும்,/துன்பங்கள் அனைத்தும் எல்லாம் நாகத்தை அணைத்தவனிடம் சென்று உரைப்பாயாக
கடலே! தேவர்களுக்காக உன்னைக் கடைந்து கலக்கி அழுத்தி,உன் உடலினுள் புகுந்து நின்று அமுதத்தை அறுத்தவர்க்கு,அதுபோலவே, என் உடலினும் புகுந்து,என் உயிரை அறுத்து அந்த மாயோனுக்கு என் துன்பங்களையெல்லாம் நாகத்தினை அணைத்தவனிடமே சென்று உரைப்பாயாக
(நடலை- ஒருவிதமான கற்பனையில் வாழ்வது)
உடலுள் புகுந்துநின் றூறல் அறுத்தவற்கு என்னையும்
உடலுள் புகுந்து நின் றூறல் அறுக்கின்ற மாயற்குஎன்
நடலைக ளெல்லாம் நாகணைக் கேசென்று ரைத்தியே
கடலே கடலே உன்னைக் கடந்து கலக்குறுத்து- கடலே! கடலே! உன்னைக் கடைந்து கலக்கி உறுத்தி உன்
உடலுள் புகுந்து நின்றூறல் அறுத்தவற்கு- உடலில் புகுந்து நின்று உன் செல்வமான அமுதத்தை அறுத்தவருக்கு
என்னையும் உடலுள் புகுந்து நின்றூறல் அறுக்கின்ற மாயற்கு- என்னையும் என் உடலில் புகுந்து நின்று என் உயிரை அறுக்கின்ற மாயனுக்கு
என் நடலைகளெல்லாம் நாகணைக்கே சென்று உரைத்தியே- என் கற்பனை வாழ்வும்,/துன்பங்கள் அனைத்தும் எல்லாம் நாகத்தை அணைத்தவனிடம் சென்று உரைப்பாயாக
கடலே! தேவர்களுக்காக உன்னைக் கடைந்து கலக்கி அழுத்தி,உன் உடலினுள் புகுந்து நின்று அமுதத்தை அறுத்தவர்க்கு,அதுபோலவே, என் உடலினும் புகுந்து,என் உயிரை அறுத்து அந்த மாயோனுக்கு என் துன்பங்களையெல்லாம் நாகத்தினை அணைத்தவனிடமே சென்று உரைப்பாயாக
(நடலை- ஒருவிதமான கற்பனையில் வாழ்வது)
No comments:
Post a Comment