உள்ளே யுருகி நைவேனை
உள்ளோ இலளோ வென்னாத
கொள்ளை கொள்ளிக் குறும்பனைக்
கோவர்த் தன்னை கண்டக்கால்
கொள்ளும் பயனொன் றில்லாத
கொங்கை தன்னைக் கிழங்கோடும்
அள்ளிப் பறித்திட் டவன்மார்வில்
எறிந்தென் அழலை தீர்வேனே
உள்ளே யுருகி நைவேனை - (இவனுக்காக) என் உடல் மட்டுமின்றி உள்ளமும் உருக் உருகி நைந்து போய்க் கொண்டிருக்கிறது
உள்ளோ இலளோ என்னாத - இவள் உயிரோடு இருக்கிறாளா அல்லது இல்லாமல் போய்விட்டாளா என்னவெனக் கேட்காத
கொள்ளை கொள்ளிக் குறும்பனைக் - என்னைக் கொள்ளைக் கொண்ட குறும்பனைக்
கோவர்த்தன் தன்னைக் கண்டக்கால் - அந்த கோவர்த்தன கிரியைத் தூக்கியவனைக் கண்டீரகளே ஆனால்
கொள்ளும் பயனொன்று இல்லாத கொங்கை தன்னை - அவனை அடையாமல் எந்த பயனற்றும் இருக்கும் என் கொங்கைகளை
கிழங்கோடும் அள்ளிப் பறித்திட்டு - வேருடன் பறித்து அள்ளிப் பறித்து
அவன் மார்பில் எறிந்தென் மார்வில் எறிந்தென் அழலை தீர்வேனே - அவன் மார்பிலே எறிந்து காமத்தினால் (எனக்கு ஏற்பட்டுள்ள) உண்டான என் வெப்ப நோயைத் தீர்ப்பேன்
கண்ணனை எண்ணி என் உடம் மட்டுமின்றி, உள்ளமும் உருகி நைந்துப் போய்க் கொண்டிருக்கிறது/இவள் உயிரோடு இருக்கிறாளா..இல்லையா என்று கூடக் கேட்காத, அந்த கோவர்த்தன மலையைத் தூக்கியவனைக் கண்டீர்கள் ஆனால் சொல்லுங்கள்.அவனை அடையாமல் , எப்பயனும் இல்லா என் கொங்கைகளை வேருடன் பறித்து, அவன் மீது எறிந்து எனக்குண்டான காமத் தீயை தீர்த்துக் கொள்கிறேன்
உள்ளோ இலளோ வென்னாத
கொள்ளை கொள்ளிக் குறும்பனைக்
கோவர்த் தன்னை கண்டக்கால்
கொள்ளும் பயனொன் றில்லாத
கொங்கை தன்னைக் கிழங்கோடும்
அள்ளிப் பறித்திட் டவன்மார்வில்
எறிந்தென் அழலை தீர்வேனே
உள்ளே யுருகி நைவேனை - (இவனுக்காக) என் உடல் மட்டுமின்றி உள்ளமும் உருக் உருகி நைந்து போய்க் கொண்டிருக்கிறது
உள்ளோ இலளோ என்னாத - இவள் உயிரோடு இருக்கிறாளா அல்லது இல்லாமல் போய்விட்டாளா என்னவெனக் கேட்காத
கொள்ளை கொள்ளிக் குறும்பனைக் - என்னைக் கொள்ளைக் கொண்ட குறும்பனைக்
கோவர்த்தன் தன்னைக் கண்டக்கால் - அந்த கோவர்த்தன கிரியைத் தூக்கியவனைக் கண்டீரகளே ஆனால்
கொள்ளும் பயனொன்று இல்லாத கொங்கை தன்னை - அவனை அடையாமல் எந்த பயனற்றும் இருக்கும் என் கொங்கைகளை
கிழங்கோடும் அள்ளிப் பறித்திட்டு - வேருடன் பறித்து அள்ளிப் பறித்து
அவன் மார்பில் எறிந்தென் மார்வில் எறிந்தென் அழலை தீர்வேனே - அவன் மார்பிலே எறிந்து காமத்தினால் (எனக்கு ஏற்பட்டுள்ள) உண்டான என் வெப்ப நோயைத் தீர்ப்பேன்
கண்ணனை எண்ணி என் உடம் மட்டுமின்றி, உள்ளமும் உருகி நைந்துப் போய்க் கொண்டிருக்கிறது/இவள் உயிரோடு இருக்கிறாளா..இல்லையா என்று கூடக் கேட்காத, அந்த கோவர்த்தன மலையைத் தூக்கியவனைக் கண்டீர்கள் ஆனால் சொல்லுங்கள்.அவனை அடையாமல் , எப்பயனும் இல்லா என் கொங்கைகளை வேருடன் பறித்து, அவன் மீது எறிந்து எனக்குண்டான காமத் தீயை தீர்த்துக் கொள்கிறேன்
No comments:
Post a Comment