நாளைவ துவைம ணமென்று நாளிட்டு
பாளைக முகுப ரிசுடைப் பந்தற்கீழ்
கோளரி மாதவன் கோவிந்த னென்பானோர்
காளைபு குதக்க னாக்கண்டேன் தோழீ
நாளை வதுவை மணமென்று நாளிட்டு- நாளைக்குத் திருமணம் என்று நாள் குறித்து
பாளை கமுகு பரிசுடைப் பந்தற்கீழ்- பாக்குமரப் பட்டைகளால் அழகுறச் செய்யப்பட்ட மணப்பந்தலின் கீழ்
கோளரி மாதவன் கோவிந்தன் என்பானோர்-குறிப்பிட்ட அந்த நன்னாளில் அழகு பொருந்திய ஒளி மிக்க சிங்கம் போன்றவன் மாதவன், கோவிந்தன் என்ற பெயர் கொண்ட
காளை புகுதக் கனாக்கண்டேன் தோழீ-காளை புகுந்தது போன்ற கனாக் கண்டேன் தோழீ
நாளைக்குத் திருமணம் என்று நாள் குறித்து,அந்நன்னாளிலே, பாக்கு மரப்பட்டைகளால் அலங்கரிக்கப்பட்ட அழகான மணப்பந்தல் போட்டு அதன் கீழ் ஒளி பொருந்திய சிங்கம் போன்ற மாதவன், கோவிந்தன் என்ற பெயருள்ள காளை கம்பீரமாகப் புகுவது போன்ற கனவு ஒன்று கண்டேன் தோழி
பாளைக முகுப ரிசுடைப் பந்தற்கீழ்
கோளரி மாதவன் கோவிந்த னென்பானோர்
காளைபு குதக்க னாக்கண்டேன் தோழீ
நாளை வதுவை மணமென்று நாளிட்டு- நாளைக்குத் திருமணம் என்று நாள் குறித்து
பாளை கமுகு பரிசுடைப் பந்தற்கீழ்- பாக்குமரப் பட்டைகளால் அழகுறச் செய்யப்பட்ட மணப்பந்தலின் கீழ்
கோளரி மாதவன் கோவிந்தன் என்பானோர்-குறிப்பிட்ட அந்த நன்னாளில் அழகு பொருந்திய ஒளி மிக்க சிங்கம் போன்றவன் மாதவன், கோவிந்தன் என்ற பெயர் கொண்ட
காளை புகுதக் கனாக்கண்டேன் தோழீ-காளை புகுந்தது போன்ற கனாக் கண்டேன் தோழீ
நாளைக்குத் திருமணம் என்று நாள் குறித்து,அந்நன்னாளிலே, பாக்கு மரப்பட்டைகளால் அலங்கரிக்கப்பட்ட அழகான மணப்பந்தல் போட்டு அதன் கீழ் ஒளி பொருந்திய சிங்கம் போன்ற மாதவன், கோவிந்தன் என்ற பெயருள்ள காளை கம்பீரமாகப் புகுவது போன்ற கனவு ஒன்று கண்டேன் தோழி
No comments:
Post a Comment