பரக்க விழித்தெங்கும் நோக்கிப்.
பலர்குடைந் தாடும் சுனையில்
அரக்கநில் லாகண்ண நீர்கள்
அலமரு கின்றவா பாராய்
இரக்கமே லொன்று மிலாதாய்
இலங்கை அழித்த பிரானே
குரக்கர சாவதறிந்தோம்
குருந்திடக் கூறை பணியாய்
பரக்கவிழித்து எங்கும் நோக்கி-நாலு திசையெங்கும் "திரு திரு" என விழித்து நோக்கி
பலர் குடைந்தாடும் சுனையில்- பலர் முங்கி நீராடும் சுனையில்
அரக்க நில்லா கண்ண நீர்கள்-அடக்கியும் நில்லாமல் கண்ணீர்
அலமருகின்றவா பாராய்-தளும்புகின்றன பாராய்
இரக்கமேல் ஒன்றும் இலாதாய்-கொஞ்சமும் இரக்க மில்லாதவனே!
இலங்கை அழித்த பிரானே-இலங்கையை அழித்த எம்பிரானே!
குரக்கரசாவது அறிந்தோம்- குரங்குகளுக்கு எல்லாம் தலைவன் ஆனவனே
குருந்து இடை கூறை பணியாய்-குருந்து மரத்தின் இடையே நீ வைத்திருக்கும் எங்கள் துணிகளைக் கொடுத்துவிடு
அரக்க பரக்க நான் கு திசைகளிலும் கண்களை ஓடவிட்டு (யாருமில்லாததை உறுதி செய்துகொண்டு),சுனையில் முங்கிக் குளிக்கும் போது, கண்களில் கண்ணீர் அடக்கியும் முடியாமல் இருப்பதைப் பார்.(அதைக் கண்டும்) சிறிதும் இரக்கமில்லாமல், வேடிக்கைப் பார்ப்பவனே!இலங்கையை அழித்த எம்பிரானே! குரங்குகளின் தலைவன் ஆனவனே! குருந்து மரத்தின் இடையே நீ வைத்திருக்கும் எங்கள் துணிகளைக் கொடுத்துவிடு
பலர்குடைந் தாடும் சுனையில்
அரக்கநில் லாகண்ண நீர்கள்
அலமரு கின்றவா பாராய்
இரக்கமே லொன்று மிலாதாய்
இலங்கை அழித்த பிரானே
குரக்கர சாவதறிந்தோம்
குருந்திடக் கூறை பணியாய்
பரக்கவிழித்து எங்கும் நோக்கி-நாலு திசையெங்கும் "திரு திரு" என விழித்து நோக்கி
பலர் குடைந்தாடும் சுனையில்- பலர் முங்கி நீராடும் சுனையில்
அரக்க நில்லா கண்ண நீர்கள்-அடக்கியும் நில்லாமல் கண்ணீர்
அலமருகின்றவா பாராய்-தளும்புகின்றன பாராய்
இரக்கமேல் ஒன்றும் இலாதாய்-கொஞ்சமும் இரக்க மில்லாதவனே!
இலங்கை அழித்த பிரானே-இலங்கையை அழித்த எம்பிரானே!
குரக்கரசாவது அறிந்தோம்- குரங்குகளுக்கு எல்லாம் தலைவன் ஆனவனே
குருந்து இடை கூறை பணியாய்-குருந்து மரத்தின் இடையே நீ வைத்திருக்கும் எங்கள் துணிகளைக் கொடுத்துவிடு
அரக்க பரக்க நான் கு திசைகளிலும் கண்களை ஓடவிட்டு (யாருமில்லாததை உறுதி செய்துகொண்டு),சுனையில் முங்கிக் குளிக்கும் போது, கண்களில் கண்ணீர் அடக்கியும் முடியாமல் இருப்பதைப் பார்.(அதைக் கண்டும்) சிறிதும் இரக்கமில்லாமல், வேடிக்கைப் பார்ப்பவனே!இலங்கையை அழித்த எம்பிரானே! குரங்குகளின் தலைவன் ஆனவனே! குருந்து மரத்தின் இடையே நீ வைத்திருக்கும் எங்கள் துணிகளைக் கொடுத்துவிடு
No comments:
Post a Comment