(இப்போது குயில் விது தூது.தன்னைப்போல குயிலுக்கும் காதல் நோய் பிடித்திருக்கக் கூடும் எனவே அது தன் மனம் உணர்ந்து தூது செல்லக்கூடும் என குயிலை தூதுவிடுகிறார்)
மன்னு பெரும்புகழ் மாதவன்
மாமணி வண்ணன் மணிமுடி மைந்தன்
தன்னை உகந்தது காரண மாக என்
சங்கிழக் கும்வழக் குண்டே
புன்னை குருக்கத்தி ஞாழல் செருந்திப்
பொதும்பெனில் வாழும் குயிலே
பன்னியெப் போது மிருந்து
விரந்தேன் பவளவா யான்வரக் கூவாய்
மன்னு பெரும்புகழ் மாதவன்-நிலைத்த பெரும் புகழையுடைய மாதவன்
மாமணி வண்ணன் மணிமுடி மைந்தன் தன்னை-பெருமை கொண்ட மணிவண்ணன் விலைமதிப்பற்ற கற்கள் பதித்த கிரீடம் அணிந்தவனை
உகந்தது காரணமாக- நான் விரும்பியது காரணமாக
என் சங்கிழக்கும் வழ்க்குண்டே-என் வளையல்களை இழக்கும் வழக்கு உண்டா (இது நியாயமா)
புன்னை குருக்கத்தி ஞாழல் செருந்தி-புன்னை.குருக்கத்தி,கோங்கு,செருந்தி போன்ற பல மரங்கள் இருக்கும்
பொதும்பெனில் வாழும் குயிலே-சோலையினில் வாழும் குயிலே
பன்னி எப்போதும் இருந்து-இரவும், பகலும் விடாமல் இருந்து
விரைந்து என் பவளவாயன் வரக் கூவாய்-பவளத்தைப் போன்ற சிவந்த இதழ்களைக் கொண்டவாயன் சீக்கிரம் என்னை வந்து சேர கூறுவாயாக
நீடித்துநிற்கும் புகழுடையோன் மாதவன்.பெரும் பெருமையைக் கொண்ட மணிவண்ணன்.மணிமுடி தரித்த மன்னன்.நான் அவனை விரும்பிய ஒரே காரணத்தால், என் சங்கு வளையல்களை இழப்பது நியாயமா?(தலைவனைப் பிரிந்த காரணத்தால், உடல் மெலிந்து,இருந்த வளையல்கள் கழன்று வீழ்ந்தனவாம்)புன்னை,குருக்கத்தி,கோங்கு, செருந்தி மரங்கள் நிறைந்த சோலையில் வாழும் குயிலே, இரவும், பகலும் என்னுடனே இருந்தௌ, பவளத்தைப் போன்ர சிவந்த இதழ்களைக் கொண்டவன் என்னை விரைவில் வந்து சேருமாறு கூவிடு
மன்னு பெரும்புகழ் மாதவன்
மாமணி வண்ணன் மணிமுடி மைந்தன்
தன்னை உகந்தது காரண மாக என்
சங்கிழக் கும்வழக் குண்டே
புன்னை குருக்கத்தி ஞாழல் செருந்திப்
பொதும்பெனில் வாழும் குயிலே
பன்னியெப் போது மிருந்து
விரந்தேன் பவளவா யான்வரக் கூவாய்
மன்னு பெரும்புகழ் மாதவன்-நிலைத்த பெரும் புகழையுடைய மாதவன்
மாமணி வண்ணன் மணிமுடி மைந்தன் தன்னை-பெருமை கொண்ட மணிவண்ணன் விலைமதிப்பற்ற கற்கள் பதித்த கிரீடம் அணிந்தவனை
உகந்தது காரணமாக- நான் விரும்பியது காரணமாக
என் சங்கிழக்கும் வழ்க்குண்டே-என் வளையல்களை இழக்கும் வழக்கு உண்டா (இது நியாயமா)
புன்னை குருக்கத்தி ஞாழல் செருந்தி-புன்னை.குருக்கத்தி,கோங்கு,செருந்தி போன்ற பல மரங்கள் இருக்கும்
பொதும்பெனில் வாழும் குயிலே-சோலையினில் வாழும் குயிலே
பன்னி எப்போதும் இருந்து-இரவும், பகலும் விடாமல் இருந்து
விரைந்து என் பவளவாயன் வரக் கூவாய்-பவளத்தைப் போன்ற சிவந்த இதழ்களைக் கொண்டவாயன் சீக்கிரம் என்னை வந்து சேர கூறுவாயாக
நீடித்துநிற்கும் புகழுடையோன் மாதவன்.பெரும் பெருமையைக் கொண்ட மணிவண்ணன்.மணிமுடி தரித்த மன்னன்.நான் அவனை விரும்பிய ஒரே காரணத்தால், என் சங்கு வளையல்களை இழப்பது நியாயமா?(தலைவனைப் பிரிந்த காரணத்தால், உடல் மெலிந்து,இருந்த வளையல்கள் கழன்று வீழ்ந்தனவாம்)புன்னை,குருக்கத்தி,கோங்கு, செருந்தி மரங்கள் நிறைந்த சோலையில் வாழும் குயிலே, இரவும், பகலும் என்னுடனே இருந்தௌ, பவளத்தைப் போன்ர சிவந்த இதழ்களைக் கொண்டவன் என்னை விரைவில் வந்து சேருமாறு கூவிடு
No comments:
Post a Comment