மென்னடை யன்னம் பரந்து விளையாடும்
வில்லிப் புத்தூருறை வான்றன்
பொன்னடி காண்பதோ ராசையினாலென்
பொருகயற் கண்ணினை துஞ்சா
இன்னடி சிலோடி பாலமு தூட்டி
எடுத்தவென் கோலக் கிளியை
உன்னோடு தோழமை கொள்வன் குயிலே
உலகளந் தான்வரக் கூவாய்
மென்னடை அன்னம் பரந்து விளையாடும்-மெல்ல நடக்கும் அன்னம் எல்லா இடங்களிலும் பரந்து விளையாடும்
வில்லிப்புத்தூர் உறைவான் தன்-வில்லிப்புத்தூரில் உறைந்துள்ளவன் தன்
பொன்னடி காண்பதோர் ஆசையினால்-பொற்பாதங்களை காணும் ஆசையினால்
என் பொரு கயற் கண்ணினை துஞ்சா-என் மீன் போன்ற கண்கள் தூங்கவில்லை
இன்னடி சிலோடி பால் அமுதூட்டி-இனிமையான அக்காரவடிசலோடு பால் அமுதும் ஊட்டி
வளர்த்த என் கோலக்கிளியை- வளர்த்த என் கோலக்கிளியை
உன்னோடு தோழமை கொள்வன் குயிலே-உன்னோடு நட்பாக ஆக்கிகின்றேன் குயிலே
உலகளந்தான் வரக் கூவாய்- உலகளந்த எம்பிரான் வரக் கூவுவாயாக
மெல்ல நடக்கும் அன்னம், பரந்து விளையாடும் வில்லிப்புத்தூரில் உறைந்துள்ளவனின் பொற்பாதங்களைக் காணும் ஆசையினால், என் மீன் போன்ற கண்கள் துங்கவில்லை.இனிமையான அக்காரவடிசலோடு, அமுதூட்டி வளர்த்து வரும் என் கிளியை, குயிலே உனக்கு நட்பாக்குகிறேன்.அதற்கு பதிலாக, உலகளந்த என் தலைவன் வர வேண்டி கூவுவாயாக
வில்லிப் புத்தூருறை வான்றன்
பொன்னடி காண்பதோ ராசையினாலென்
பொருகயற் கண்ணினை துஞ்சா
இன்னடி சிலோடி பாலமு தூட்டி
எடுத்தவென் கோலக் கிளியை
உன்னோடு தோழமை கொள்வன் குயிலே
உலகளந் தான்வரக் கூவாய்
மென்னடை அன்னம் பரந்து விளையாடும்-மெல்ல நடக்கும் அன்னம் எல்லா இடங்களிலும் பரந்து விளையாடும்
வில்லிப்புத்தூர் உறைவான் தன்-வில்லிப்புத்தூரில் உறைந்துள்ளவன் தன்
பொன்னடி காண்பதோர் ஆசையினால்-பொற்பாதங்களை காணும் ஆசையினால்
என் பொரு கயற் கண்ணினை துஞ்சா-என் மீன் போன்ற கண்கள் தூங்கவில்லை
இன்னடி சிலோடி பால் அமுதூட்டி-இனிமையான அக்காரவடிசலோடு பால் அமுதும் ஊட்டி
வளர்த்த என் கோலக்கிளியை- வளர்த்த என் கோலக்கிளியை
உன்னோடு தோழமை கொள்வன் குயிலே-உன்னோடு நட்பாக ஆக்கிகின்றேன் குயிலே
உலகளந்தான் வரக் கூவாய்- உலகளந்த எம்பிரான் வரக் கூவுவாயாக
மெல்ல நடக்கும் அன்னம், பரந்து விளையாடும் வில்லிப்புத்தூரில் உறைந்துள்ளவனின் பொற்பாதங்களைக் காணும் ஆசையினால், என் மீன் போன்ற கண்கள் துங்கவில்லை.இனிமையான அக்காரவடிசலோடு, அமுதூட்டி வளர்த்து வரும் என் கிளியை, குயிலே உனக்கு நட்பாக்குகிறேன்.அதற்கு பதிலாக, உலகளந்த என் தலைவன் வர வேண்டி கூவுவாயாக
No comments:
Post a Comment