வெள்ளை விளிசங்கிடங்கையிற்
கொண்ட விமலனெனக்குருக் காட்டான்
உள்ளம் புகுந்தென்னை நைவித்து நாளும்
உயிர்பெய்து கூத்தாட்டுக் காணும்
கள்ளவிழ் செண்பகப் பூமலர் கோதிக்
களித்திசை பாடுங்குயிலே
மெள்ள விருந்து மிழற்றி
மிழற்றாதென் வேங்கட வன்வரக் கூவாய்
வெள்ளை விளி சங்கிடங்கையிற்
கொண்ட- கூவும் வெண்மையான சங்கினை இடக்கையில் கொண்ட
விமலன் எனக் குருக் காட்டான்-விமலன், எனக்கு அவன் உருவத்தைக் காட்ட மாட்டான்
உள்ளம் புகுந்து என்னைநைவித்து நாளும்-என் உள்ளத்தில் புகுந்து என்னை வருத்தி நாள்தோறும்
உயிர் பெய்து கூட்டாட்டுக் காணும்-என் உயிர் வதைத்து கூட்டாடுவதைக் காண்பான்
கள் அவிழ் செண்பகப்பூ மலர் கோதிக்-தேன் சுரக்கும் செண்பகப் பூ மலர் கோதி
களித்து இசை பாடும் குயிலே-இன்பத்துடன் இசை பாடும் குயிலே
மெள்ள விருந்து மிழற்றி- மெதுவாக இருந்து மழலைமொழி பேசி என் அருகே இருந்து என்னை வதைக்காமல்
மிழற்றாது என் வேங்கடவன் வரக் கூவாய்- என் வேங்கடவன் வர நீ கூவுவாயாக
கொண்ட விமலனெனக்குருக் காட்டான்
உள்ளம் புகுந்தென்னை நைவித்து நாளும்
உயிர்பெய்து கூத்தாட்டுக் காணும்
கள்ளவிழ் செண்பகப் பூமலர் கோதிக்
களித்திசை பாடுங்குயிலே
மெள்ள விருந்து மிழற்றி
மிழற்றாதென் வேங்கட வன்வரக் கூவாய்
வெள்ளை விளி சங்கிடங்கையிற்
கொண்ட- கூவும் வெண்மையான சங்கினை இடக்கையில் கொண்ட
விமலன் எனக் குருக் காட்டான்-விமலன், எனக்கு அவன் உருவத்தைக் காட்ட மாட்டான்
உள்ளம் புகுந்து என்னைநைவித்து நாளும்-என் உள்ளத்தில் புகுந்து என்னை வருத்தி நாள்தோறும்
உயிர் பெய்து கூட்டாட்டுக் காணும்-என் உயிர் வதைத்து கூட்டாடுவதைக் காண்பான்
கள் அவிழ் செண்பகப்பூ மலர் கோதிக்-தேன் சுரக்கும் செண்பகப் பூ மலர் கோதி
களித்து இசை பாடும் குயிலே-இன்பத்துடன் இசை பாடும் குயிலே
மெள்ள விருந்து மிழற்றி- மெதுவாக இருந்து மழலைமொழி பேசி என் அருகே இருந்து என்னை வதைக்காமல்
மிழற்றாது என் வேங்கடவன் வரக் கூவாய்- என் வேங்கடவன் வர நீ கூவுவாயாக
No comments:
Post a Comment