எத்திசை யுமம ரர்பணிந் தேத்தும்
இருடீகே சன்வலி செய்ய
முத்தன்ன வெண்முறு வற்செய்ய வாயும்
முலையு மழகழிந் தேன்நான்
கொத்தலர் காவில் மணித்தடம் கண்படை
கொள்ளு மிளங்குயி லேஎன்
தத்துவ னைவரக் கூகிற்றி யாகில்
தலையல்லால் கைம்மாறி லேனே
எத்திசையும் அமரர் பணிந்தேத்தும்-எல்லாதிசைகளிலும் வானவர்கள் வணங்கும்
இருடீகேசன் வலி செய்ய- ரிஷிகேஷன் எனக்குக் காட்சித் தராது மனம் வலிக்கச் செய்கிறான்
முத்தன்ன வெண்முறு வற்செய்ய வாயும்-முத்துப் போன்ற வெண்மையான பற்களோடு அழகாக முறுவல் செய்த என் வாயும்
முலையும் அழகழிந்தேன்நான்- எனது முலைகளின் அழகையும் இழந்த நான்
கொத்தலர் காவில் மணித்தடம் கண்படை-கொத்து கொத்தாக மலர்கள் கொண்ட சோலையிலே அழகிய இடத்தில் உறக்கம்
கொள்ளும் இளங்குயிலே- கொள்ளும் இளங்குயிலே
என் தத்துவனைவரக் கூகிற்றியாகில்-என் தத்துவனை வரக் கூறுவாய் ஆகில்
தலையல்லால் கைம்மாறிலேனே-காலமெல்லாம் அதற்கான கைமாறாக என் தலையை உன் பாதத்தில் வைத்து வணங்குவேன் .வேறு கைமாறு அறியேன்
பூங்கொத்துகள் நிறைந்த சோலையில், அழகிய இடத்தில் உறக்கம் கொள்ளும் இளங்குயிலே, என் இறைவன் என்னை சேர வரக் கூறுவாய் எனில் காலம் முழுதும் உன் பாதங்களில் என் தலையை வைத்து நன்றியாய் இருப்பதைத் தவிர வேறு எதையும் நான் அறியலேன்.
இருடீகே சன்வலி செய்ய
முத்தன்ன வெண்முறு வற்செய்ய வாயும்
முலையு மழகழிந் தேன்நான்
கொத்தலர் காவில் மணித்தடம் கண்படை
கொள்ளு மிளங்குயி லேஎன்
தத்துவ னைவரக் கூகிற்றி யாகில்
தலையல்லால் கைம்மாறி லேனே
எத்திசையும் அமரர் பணிந்தேத்தும்-எல்லாதிசைகளிலும் வானவர்கள் வணங்கும்
இருடீகேசன் வலி செய்ய- ரிஷிகேஷன் எனக்குக் காட்சித் தராது மனம் வலிக்கச் செய்கிறான்
முத்தன்ன வெண்முறு வற்செய்ய வாயும்-முத்துப் போன்ற வெண்மையான பற்களோடு அழகாக முறுவல் செய்த என் வாயும்
முலையும் அழகழிந்தேன்நான்- எனது முலைகளின் அழகையும் இழந்த நான்
கொத்தலர் காவில் மணித்தடம் கண்படை-கொத்து கொத்தாக மலர்கள் கொண்ட சோலையிலே அழகிய இடத்தில் உறக்கம்
கொள்ளும் இளங்குயிலே- கொள்ளும் இளங்குயிலே
என் தத்துவனைவரக் கூகிற்றியாகில்-என் தத்துவனை வரக் கூறுவாய் ஆகில்
தலையல்லால் கைம்மாறிலேனே-காலமெல்லாம் அதற்கான கைமாறாக என் தலையை உன் பாதத்தில் வைத்து வணங்குவேன் .வேறு கைமாறு அறியேன்
பூங்கொத்துகள் நிறைந்த சோலையில், அழகிய இடத்தில் உறக்கம் கொள்ளும் இளங்குயிலே, என் இறைவன் என்னை சேர வரக் கூறுவாய் எனில் காலம் முழுதும் உன் பாதங்களில் என் தலையை வைத்து நன்றியாய் இருப்பதைத் தவிர வேறு எதையும் நான் அறியலேன்.
No comments:
Post a Comment